Thursday 2nd of May 2024 12:19:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில்  ஒருவருக்கு கொரோனா!

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோனையின் போதே அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் மருதங்கேணியில் உள்ள கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவிக்கு தெரிவித்தார்.

இதனை அடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE